வித்தியாலய அதிபர் சிவலிங்கம் இந்திரன் தலைமயில' நடைபெற்ற நிகழ்வில் கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், கதிரவெளி கனிஸ்ட வித்தியாலய அதிபர் பி.இராமச்சந்திரன், ஊடகவியலாளர்களாக ந.குகதர்சன், எஸ்.ஏ.ஸ்ரீதர், சமூக செயற்பாட்டாளர் அ.வாசுதன், கல்வி கற்பித்த திருமதி. நிலாந்தினி விஜிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாகரை வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் ஜெகதீஸ்வரன் அபிஷ்னன் 143 புள்ளிகளையும், நவக்குமார் டிலுக்ஷிக்கா 143 புள்ளிகளையும், ரகுக்குமார் ஷக்சனா 142 புள்ளிகளையும் பெற்று சித்திபெற்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கனடா நாட்டில் வசிக்கும் தொழிலதிபரும், சமூகசேவையாளரும், ஊடகவியலாளருமான திருமதி.ரேகா சிவாவின் நிதி அனுசரணையில் குறித்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
