
உயிரிழந்த இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டு இதயத்தைத் தாக்கியுள்ளது என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய் – இணுவில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடிகாமம், கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த நீதவான், உயிரிழந்த இளைஞனின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தவிட்டார்.
அதனடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் இளைஞனின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
