12,000 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
அந்தவகையில் 2013 மற்றும் 2018 க்கு இடையில் பட்டம் பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அவர் கூறினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அரசியல் தலையீடுகள் இன்றி 12,000 பட்டதாரிகளுக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்த அவர் இதில் வெளிநாட்டு பட்டதாரிகளும் அடங்குவார்கள் என்றும் கூறினார்.