முதல் செவ்வாய் ஆராதனைக்காய் திறக்கப்பட்டது கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்
ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் கொழும்பு, புனித அந்தோனியார் தேவாலயம் இன்று (செவ்வாய்க்கிழமை) மக்கள் வழிப்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையான இன்று தேவாலயத்தில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றதுடன் மக்கள் அந்தோனியாரின் ஆசியையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த விசேட ஆராதனையில் நூற்றுக்கணக்கானோர் இன, மத பேதங்கள் இன்றி வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.