எஸ்.எம்.எம்.முர்ஷித்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிலும் அவரது நேரடிக்கண்காணிப்பில் நெறிப்படுத்தல் மற்றும் செயற்படுத்தப்படுகின்ற போதையிலிருந்து விடுபட்ட நாடு ஒன்றுக்கான விசேட நிகழ்வான சித்திரை உறுதி உரை நிகழ்வு இன்று (03.04.2019) புதன்கிழமை நாடலாவிய ரீதியில் இடம் பெற்றது.
இதற்கமைய கோறளைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சித்திரை உறுதி உரை நிகழ்வு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
ஜனாதிபதியின் என்னக்கருவை பிரதேச செயலாளர் தெளிவு படுத்தியதன் பின்னர் பிரதேச செயலாளரின் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாட்டுக்கான சித்திரை உறுதி உரையை எடுத்துக் கொண்டார்கள்.