LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 9, 2019

பாகிஸ்தானின் மற்றுமொரு உளவு விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது

பாகிஸ்தானின் மற்றுமொரு உளவு விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் கங்காநகர் பகுதியில் பறந்துகொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டு ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவம் இன்று (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தியது.

கங்காநகர் செக்டார் அருகே ஹிந்துமால்கோட்டில் பாகிஸ்தானின் உளவு விமானம் இன்று அதிகாலை 5 மணிக்கு நுழைந்தது. இதைக் கண்ட இந்திய பாதுகாப்பு படையினர் சரமாரி தாக்குதலை நடத்தினர். இதையடுத்து அந்த உளவு விமானம் பாகிஸ்தானை நோக்கித் திரும்பிச் சென்ற நிலையில் மீண்டும் இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தானின் உளவு விமானத்தை இந்திய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை தாக்கியழித்தது. இதையடுத்து எல்லை தாண்டி வந்து இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் கூறியதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனிடையே, கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற விமானப்படைத் தாக்குதலுக்குப் பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட 3ஆவது உளவு விமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7