LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+28°C


















Wednesday, March 6, 2019

காங்கிரஸ் – தி.மு.க. அமைத்துள்ளது சந்தர்ப்பவாதக் கூட்டணி: பிரதமர் மோடி!

காங்கிரசுடன் தி.மு.க. தற்போது அமைத்துள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உலகில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் மத்திய அரசு ஓடோடி செல்கிறது. இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் இலட்சியம். எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக வலிமையான நாட்டையும், இராணுவத்தையும் விரும்பவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள். காங்கிரசால் மாநில நலன்களைப் பூர்த்தி செய்யமுடியாது. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பமே முக்கியம்.

கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்த காங்கிரசுடன் தி.மு.க. தற்போது வைத்துள்ளது சந்தர்ப்பவாதக் கூட்டணி என அனைவருக்குமே புரியும்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7