LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 10, 2019

நிக்காராகுவா மக்களின் போராட்டம் வெற்றி கண்டது: தேர்தல் நடத்த அரசாங்கம் இணங்கியது

நிக்காராகுவா அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆர்பாட்டக்காரர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) அரசாங்கம் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடத்துதல், ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை வெளிவிடுதல், எதிர்கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி நாட்டில் நிலவும் தசாப்தகால அரசியல் பிரச்சினையை தீர்த்தல் ஆகியவற்றை உள்ளடங்கி  குறித்த அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

கடந்த 3 தசாப்தமாக நிக்காராகுவா நாட்டில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் தேர்தல் நடத்துமாறும் கோரி மக்கள்போராடி வந்தனர். போராட்டத்தின் போது 320 போராளிகள் கொல்லப்பட்டதோடு பலர் காயங்களுக்கு உஉள்ளாகி இருந்தனர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் எதிர்கட்சியுடனான பேச்சு வார்த்தையில் அரசாங்கம் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. இதேவேளை அரசாங்கத்தின் அறிக்கை வெளியாகியுள்ள போதும் கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதமாகலாம் என அந்நாட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7