எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து, ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன எதிர்வரும் 8ஆம் திகதி, கண்டி பொதுச் சந்தைப் பகுதியில் பாரிய பேரணி ஒன்றை நடத்தவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் நிறுவுநரான பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தக் கூட்டத்திலேயே பபசில் ராஜபக்ஷவும் மேடையேறவுள்ளார்.
இதையடுத்து, வரும் 26ஆம் திகதி அனுராதபுர சல்காடோ மைதானத்தில் மற்றொரு பாரிய பேரணி நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
