மத்தியிலும், அதனை தொடர்ந்து மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரலாறு எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் உறுதியாக திரும்பும்.
மக்களவை தேர்தலுக்கான தோழமை கட்சியினருடனான இணக்கமான உடன்பாடு விரைவாக நிறைவேறவுள்ளது. அந்தவகையில், இது கொள்கை மற்றும் மக்களுக்கான வெற்றி கூட்டணி என ஸ்டாலின் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் தி.மு.க. ஈடுபட்டு வருகின்றது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
இதில் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையிலேயே, அரசுகளுக்கு எதிராக பேரணி நடைபெறும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
