கனடாவில் தகவல் மையமொன்றை நிறுவி பலருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக பேஸ்புக் நிறுவனம், கனேடிய அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளித்திருந்தது என பிரித்தானிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு பிரதி உபகாரமாக, தகவல் சட்டங்களில் சில சலுகைகளை வழங்குமாறும் பேஸ்புக் நிறுவனம் கோரியதாகத் கூறப்படுகிறது.
கடந்த கொன்சர்வேட்டிவ் அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஓட்டாவாவில் நடைபெறவுள்ள சர்வதேச குழுவொன்றின் அமர்வில் முன்னிலையாகுமாறு பேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போலி தகவல்கள் மற்றும் செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.