பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி ஐ.சி.சி.யிடம் இன்று (சனிக்கிழமை) இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தியா-அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் இராணுவத் தொப்பியுடன் களமிறங்க இந்திய அணி முடிவு செய்தது. இதன்படி வீரர்கள் இராணுவத் தொப்பியுடன் விளையாடினர்.
இந்நிலையில், இராணுவ தொப்பி அணிந்து இந்திய வீரர்கள் விளையாடியதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த குரேஷி கூறுகையில், “ இந்திய அணி தன்னுடைய சொந்தத் தொப்பிக்குப் பதிலாக இராணுவத் தொப்பியை அணிந்து விளையாடியதை உலகமே பார்த்தது.
எனவே ஐ.சி.சி. தானாக முன்வந்து இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.