LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, March 12, 2019

பொள்ளாச்சி விவகாரம்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி கைது!

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையைக் கண்டித்து திருவள்ளுவர் திடலில் கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்றது.

அப்போது பேசிய கனிமொழி, “பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தமிழகத்தையே தலை குனியச் செய்துள்ளது. ஏழு ஆண்டுகளாக இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஆனால் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் யாருக்கு வேலை செய்கிறார்கள்? பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளிவரும் அளவிற்கு பொலிஸார் நடந்து கொண்டுள்ளனர்” என கண்டனம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழியை பொலிஸார் கைது செய்தனர். எனினும் சிறிது நேரத்தில் அவரை பொலிஸார் விடுவித்தனர்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியைச் சேர்ந்த நிதி முகாமையாளர் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7