
லண்டன் சிற்றி விமான நிலையம், ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் வோட்டர்லூ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இப்பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இப்பொதிகள் மூன்றும் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டதாகவும் இப்பொதிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளினால் எவரும் பாதிக்கப்படவில்லையெனவும் சேவைகள் எதுவும் இடையூறுகளுக்கு உள்ளாகவில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
