சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள வாகனத்தை தேடிவரும் பொலிஸார், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தோர் அல்லது ஒளிப்பதிவு ஆதாரங்களை வைத்திருப்போருடன் பேச விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த அந்த வாகனத்தின் அடையாளங்களோ, அதன் சாரதி குறித்த விபரங்களோ வெளியிடப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நெடுஞ்சாலை 7இற்கு வடக்கே, மார்க்கம் வீதியில், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது காயமுற்றவர் சிறு காயங்களுக்கே உள்ளானதாக தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.