LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, March 12, 2019

இந்தியாவின் தற்போதைய நிலை கவலையளிக்கிறது – பிரியங்கா பேச்சு

அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவில் இன்று நடப்பது வேதனை அளிக்கிறது என காங்கிரஸின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், “இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பிரதமர் மோடி அரசு படுதோல்வியடைந்துவிட்டது.

வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மக்கள் தங்களின் எதிர்காலத்தை தேர்வு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு, பெண்களின் பாதுகாப்பு, விவசாயிகளின் எதிர்காலம் போன்றவை இந்த தேர்தலில் முக்கியமாக இருக்கும். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவில் இன்று நடப்பது வேதனை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “பா.ஜ.க. வெறுப்பு அரசியலைக் கையாண்டு வருகிறது. தன்னாட்சி அமைப்புகளை  பா.ஜ.க. சீர்குலைக்கிறது. இந்த ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏழைகளின் பணம் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து இலாபம் வந்தாலும் அது 15 கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே செல்கிறது” எனக் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7