LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 9, 2019

சின்னமுத்து நோய் தொற்று: நூறு பேருக்கு மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை!

ரொறன்ரோவில் 12 மாதத்திற்கு உட்பட்ட வயதுடைய குழந்தை ஒன்றுக்கு சின்னமுத்து எனப்படும் தட்டம்மை நோய் தோற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் நூறு பேருக்கு மருத்துவ அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்று கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவமனையின் பணியாளர்கள், அங்கு வந்திருந்த நோயாளிகள் ஆகியோருக்கே, ரொறன்ரோ மருத்துவ அதிகாரிகளால் தொடர்பு கொள்ளப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோயின், தாக்கம் 7இல் இருந்து 21 நாட்கள் வரையிலான காலப்பகுதியிலேயே வெளியே தெரியும் என்பதால், அனைவரும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுவிட்டு திரும்பிய ஒரு குடும்பத்தின் 12 மாதத்திற்கு உட்பட்ட வயதுடைய குழந்தை ஒன்றுக்கே இந்த நோய் ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கருதி அந்தக் குடும்பத்தார் தொடர்பான விபரங்களையோ, அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்று வந்தார்கள் என்ற விபரங்களையோ வெளியிடவில்லை என்றும் ரொறன்ரோ நகர சுகாதார மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பியர்சன் அனைத்துலக விமான நிலையம் ஊடாகவே பயணித்துள்ளதாகவும், அப்போது குறித்த அந்த குழந்தையிடம் எந்தவித நோய் அறிகுறிகளும் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7