LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 10, 2019

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க: ஒப்பந்தம் கைச்சாத்து!

அ.தி.மு.க. – தே.மு.த.க. இடையேயான கூட்டணி இன்று உறுதி செய்யப்பட்டதுடன், அதற்கான ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கையெழுத்தானது.

அ.தி.மு.க. கூட்டணியில், தே.மு.தி.க.வை எப்படியாவது தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக இருந்தது.

இதனைக்கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க., பா.ம.க. ஆகியனவும் தமது இணக்கத்தினைத் தெரிவித்திருந்ததால், அமைச்சர்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்தனர்.

4 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்குவதாக அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. ஆனால், தே.மு.தி.க. தரப்பில் 5 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவைத் தொகுதி மற்றும் 21 சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் இடைத்தேர்தலில் குறிப்பிட்ட அளவு இடங்கள் கோரப்பட்டதையடுத்து இழுபறிநிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இன்று இணைந்தது.

தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், உடன் பிரேமலதா மற்றும் சுதிஷ் ஆகியோர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7