நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த ‘இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடியின் கருத்திற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் கூறியுள்ளார். அவர் அதில் மேலும் பதிவிட்டுள்ளதாவது,
“இந்திய விமானப் படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் ராகுல் காந்தி என்பதைப் பிரதமர் மோடி மறந்து விட்டார். விமானப் படையின் துணைத் தளபதி உயிர் இழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூற மறுத்து விட்டார்.
இப்படியான நிலையில், தாக்குதலில் 350 பேர் வரை உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது. இந்தியக் குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன்.
ஆனால் உலகம் நம்ப வேண்டுமே. அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு” தெரிவித்துள்ளார்.
