LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 11, 2019

குற்றப்புலனாய்வுப் பிரிவில் 8 மணிநேர வாக்குமூலம்!

முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட குற்றப்புலனாய்வுப் பிரிவில் 8 மணிநேர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (திங்கட்கிழமை) கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் முன்னிலையானார்.

இதன்போதே அவரிடம் சுமார் 8 மணிநேரங்கள் குறித்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

2008 முதல் 2009 ஆம் ஆண்டுகளுக்கிடையில் கொழும்பு தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனைப் பகுதிகளில் வைத்து மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், 14ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்யக்கூடும் என்பதால் தலைமறைவாகியுள்ளார்.

இந்தநிலையிலேயே தன்னைக் கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தடை விதிக்கக்கோரி, அட்மிரல் கரன்னகொட உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.

உச்சநீதிமன்றம், அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்ததுடன், அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும்படி அழைப்பாணையும் அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7