வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று வெவ்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த ஐந்து உழவு இயந்திரமும், ஐந்து சாரதியையும் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான குழுவினரினால் பொத்தானை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த மூன்று உழவு இயந்திரமும், மூன்று சந்தேக நபரையும் பொத்தானை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
அத்தோடு கிரான் புலிபாய்ந்தகல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த நிலையில் ஒரு உழவு இயந்திரமும், ஒரு சந்தேக நபரையும் கிரான் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதுடன், மேலும் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த நிலையில் ஒரு உழவு இயந்திரமும், ஒரு சந்தேக நபரையும் காவத்தமுனை பகுதியிலும் வைத்து கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோத மண் அகழ்வில் பலகாலமாக ஈடுபட்டு வருபர்கள் என்பதுடன், இவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக பொத்தானை, பொண்டுகள்சேனை, வாகனேரி, ஆத்துச்சேனை, புலியாந்தகல் போன்ற பகுதிகளில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான குழுவினரினால் பொத்தானை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த மூன்று உழவு இயந்திரமும், மூன்று சந்தேக நபரையும் பொத்தானை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
அத்தோடு கிரான் புலிபாய்ந்தகல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த நிலையில் ஒரு உழவு இயந்திரமும், ஒரு சந்தேக நபரையும் கிரான் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதுடன், மேலும் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த நிலையில் ஒரு உழவு இயந்திரமும், ஒரு சந்தேக நபரையும் காவத்தமுனை பகுதியிலும் வைத்து கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோத மண் அகழ்வில் பலகாலமாக ஈடுபட்டு வருபர்கள் என்பதுடன், இவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக பொத்தானை, பொண்டுகள்சேனை, வாகனேரி, ஆத்துச்சேனை, புலியாந்தகல் போன்ற பகுதிகளில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.