தஞ்சாவூரில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற திராவிடர் கழகத்தின் சமூக நீதி மாட்டில், திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவர் குறித்த தகவலை கி.வீரமணி அறிவித்துள்ளார்.
மாநாட்டு கூட்டத்தில் வீரமணி பேசுகையில், “எனது காலத்துக்கு பிறகு திராவிட கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் செயல்படுவார்.
கழத்தின் துணை தலைவராக இருந்து வரும் கலிபூங்குன்றன், மயிலாடுதுறையில் பிறந்தவர். இளமை காலத்தில் இருந்தே பெரியாரின் தொண்டர் ஆவார்.
நெருக்கடி நிலையின்போது அரசு வேலையை துறந்து திராவிடர் கழகத்தில் இணைந்தவர்” என தெரிவித்தார்.
சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு, பெண் உரிமைகள் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட முதலாவது திராவிடக் கட்சியான திராவிடர் கழகத்தின் தற்போதைய தலைவராக கி.வீரமணி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.