குறிப்பாக கொலை மற்றும் கொலைசெய்ய எத்தணித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரெடெரிக் சில்வா (வயது-37) என்பவரை நேற்றிரவு கைதுசெய்யததாகவும், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றத்திற்காக, கனடா முழுவதிலும் பிரெடெரிக் சில்வாவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதே வருடத்தில் மற்றுமொருவரை கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டும் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி தாக்குதல் சம்பவங்களும் இவர்மீது பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரெடெரிக் சில்வா மிகவும் ஆபத்தான குற்றவாளியென மொன்றியல் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.