தஞ்சையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சமூக நீதியைக் காப்பாற்ற மாநாடு மட்டுமல்ல போராட்டமும் நடத்த வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. மோடியால் இனி பிரதமர் ஆகவே முடியாது, இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி தான் தெரிவுசெய்யப்படுவார்.
மக்களிடம் மோடி பணத்தை பிடுங்கிவிட்டு, இப்போது விவசாயிகளுக்கு கொடுப்பதாக நடிக்கிறார். மோடியால் இந்தியா 15 வருடம் பின்னோக்கி சென்றுள்ளது.
மோடி இனி பிரதமர் இருக்கையில் அமரவே முடியாது. ராகுல் காந்திதான் பிரதமர் ஆவார் என்பதை என்னால் உறுதியாகக்கூற முடியும்.
இந்தத் தேர்தலில் தமிழகம் தான் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும்” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவ