கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே ‘வட சென்னை’, ‘மாரி-2’ படங்களுக்குப் பிறகு ‘அசுரன்’ படப்பிடிப்பில் தனுஷ் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்கப்போவதாக திட்டமிடப்பட்டது.
எனினும் இருவருமே வேறு பட வேலைகளில் இறங்கியதால் இப்பட உருவாக்கம் கிடப்பில் போடப்பட்டது.
இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், இப்போது தனுஷ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் முழுவீச்சில் கதை எழுதிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் எழுத்துப் பணிகள் நிறைவுபெற்று ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளது.
படத்தின் பெரும்பாலான பகுதிகள் நியூயோர்க் நகரில் படமாக்கப்படவுள்ளன. இப்படத்தில் பிரபல ஹொலிவூட் நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.