இருநாடுகளுக்கிடையில் இடம்பெற்ற பல சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகளின் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வர்த்தக ரீதியிலான சமாதான உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த உடன்பட்டிருந்தனர்.
இந்நிலையில் புதிய சுற்று பேச்சுவார்த்தைகளில், இரு தரப்பினரும் தொழிநுட்ப பரிமாற்றம், சொத்துரிமை பாதுகாப்பு, விவசாயம், சேவைகள் மற்றும் நாணயம் ஆகியவற்றில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து நேர்மறையான முன்னேற்றத்தைச் செய்துள்ளனர் என வில்லமெட் பல்கலைக்கழகத்தின் பொருளாதார இணைப் பேராசிரியர் யான் லியாங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இருதரப்பு பேச்சுவார்த்தையும் சாத்தியமான முடிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காலக்கெடுவை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார், எனினும் இன்னும் பல தடைகள் இருப்பதாக அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி தெரிவித்திருப்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப, பேச்சுவார்த்தையில் பல முன்னேற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். அத்தோடு இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகளை விரிவாக்க முடிவு செய்துள்ளனர்.