LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 24, 2019

ஏழு பேரின் விடுதலையை ஆளுநர் மேலும் தாமதிப்பது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

குற்றங்கள் புரியாத பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென அமைச்சரவை பரிந்துரை செய்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதனை கருத்திற்கொள்ளாமல் செயற்படுவதனை வன்மையாக கண்டிப்பதாக ப.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ப.ம.க இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ராமதாஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ராஜிவ் காந்தி வழக்கில் குற்றம் புரிந்ததாக அவர்கள் மீது முறையான ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில், 28 ஆண்டுகள் கடந்தும் தடுப்பு காவலில் வைத்திருப்பது சிறந்ததொன்றல்ல.

மேலும் பேரறிவாளனுக்கு இக்கொலையுடன் எந்த தொடர்பும் இல்லையென அவ்வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம், 7 பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழ் நாட்டு அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது.

அதற்கு பதிலளித்த ஆளுநர் மாளிகை, சட்ட ஆலோசனைகளை இவ்விடயத்தில் பெறவேண்டியுள்ளது. அதன்பின்னரே விடுதலை குறித்து அறிவிப்பதாக தெரிவித்தது.

இவ்வாறு ஆளுநர் மாளிகை கூறி, 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஆளுநர் அமைதியாகவே உள்ளார்.

மேலும் 7 பேர் மீதுள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களது விடுதலை குறித்து ஆளுநர் கவனம் செலுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7