குறித்த கலந்துரையாடலில் இடை நிறுத்தப்பட்ட மண் அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், முப்படையின் உயரதிகாரிகள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்
இதில் உரையாற்றிய துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்
இடை நிறுத்தப்பட்ட மண் அகழ்வுப் பணிகளை உள்ளூர் அகழ்வாளர்களுக்கும் தொழிலாழிகளுக்கும் வழங்குவதாயின் வழங்க வேண்டும் வெளி மாவட்டத்தை சேர்ந்தோர்களுக்கு வழங்குவதை தடை செய்யவும் . பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட குறைந்த அளவிலான அனுமதிக்கான பத்திரங்களை கூடுதலாக 100 கியூப் வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.
குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே, முன்னாள் மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.
ஏ.புஷ்பகுமார ,முன்னாள் கிழக்கு மாகாண தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள்,மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் பெரேரா, உட்பட முப்படைகளின் உயரதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள், மாவட்ட மண் அகழ்வாளர்கள் சங்கம் என பலர் பங்கேற்றார்கள்.
(அ . அச்சுதன்)