LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 25, 2019

திருகோணமலை மாவட்டத்தில் மண் அகழ்வுக்கான இடைக் கால தடை

திருகோணமலை மாவட்டத்தில் மண் அகழ்வுக்கான இடைக் கால  தடை உத்தரவை அடுத்து மீண்டும் அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் இன்று (25) திங்கட் கிழமை மாலை  திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இடை நிறுத்தப்பட்ட மண் அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், முப்படையின் உயரதிகாரிகள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்

 இதில் உரையாற்றிய துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்

இடை நிறுத்தப்பட்ட மண் அகழ்வுப் பணிகளை உள்ளூர் அகழ்வாளர்களுக்கும் தொழிலாழிகளுக்கும்  வழங்குவதாயின் வழங்க வேண்டும் வெளி மாவட்டத்தை சேர்ந்தோர்களுக்கு வழங்குவதை தடை செய்யவும் . பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட குறைந்த அளவிலான அனுமதிக்கான பத்திரங்களை கூடுதலாக 100 கியூப் வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.

குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே,  முன்னாள் மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.
ஏ.புஷ்பகுமார ,முன்னாள் கிழக்கு மாகாண தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள்,மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் பெரேரா, உட்பட முப்படைகளின் உயரதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள், மாவட்ட மண் அகழ்வாளர்கள் சங்கம் என பலர் பங்கேற்றார்கள்.
(அ . அச்சுதன்)











 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7