நோய் மற்றும் வயது முதிர்ச்சியால், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி தமது பதவியை துறக்கவுள்ளார்.
இந்நிலையில் அரியணையில் அமர்ந்து இன்றுடன் 30 ஆவது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு அங்கு கருத்து தெரிவித்த அவர் “தனது நாட்டை இன்னும் திறன் மிக்க மற்றும் உலகளவில் “நேர்மையான” உறவுகளை உருவாக்கவும்” அழைப்பு விடுத்தார்.
85 வயதுடைய அகிடோ, கடந்த இரண்டு நூற்றாண்டு காலங்களில், ஜப்பானில் அரியணையை அலங்கரித்துவிட்டு தானாகவே பதவிதுறக்கும் முதல் பேரரசர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அகிடோ கடந்த 2016ஆம் ஆண்டு சத்திரசிகிச்சை செய்துகொண்டார். அதன் பின்னர், வயது முதிர்ச்சி தனது பணிகளை முழுமையாக நிறைவேற்ற தடையாக இருக்குமென அஞ்சுவதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்னணியில் அவர் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பதவியை துறந்து ஓய்வுபெறவுள்ளார். இதனை அடுத்து மறுதினமே 59 வயதுடைய இளவரசர் நருஹிட்டோ பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.