இதேவேளை இரண்டாவது ட்ரக்கில் இருந்து பலரும் பொருட்களை அகற்றிக்கொண்டிருந்த அதே நாளில் உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை பெற்றுக்கொள்ள வந்தவர்கள் மீது வெனிசுவேலா துருப்புக்கள் கண்ணீர் புகை குண்டுகளையும் ரப்பர் துகள்களையும் தூக்கி எறியும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
போர் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருக்கும் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ தமது நாட்டில் நடைபெறும் நெருக்கடிகளை மறுப்பதோடு நாட்டின் பொருளாதார நிலை மோசமாகி மருந்து மற்றும் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதும் சர்வதேச உதவிகளையும் மறுத்து வருகிறார்.
வெனிசுவேலாவின் சட்டபூர்வமான தலைவர் எனக் கருதப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ, தனிப்பட்ட முறையில் ஆதரவாளர்கள் மூலமாக, வெனிசுலாவிற்குள் நிவாரணங்கள் நுழைவதை உறுதிப்படுத்துவதாக அறிவித்தார். இவர் ஜனாதிபதி மதுரோவை ஒரு சூதாட்டக்காரர் என விமர்சித்து வருகிறார். எனினும் அவரது திட்டங்கள் குறித்து விளங்கவில்லை. அரசியல் ஆய்வாளர்கள் வெனிசுவேலா படையை வழிநடத்தலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.