வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புல்வாமா தாக்குதல் சம்பவம் தீவிரவாதத்தை அடியோடு அழிக்கவேண்டுமென்ற எண்ணத்தினை ஏற்படுத்தியுள்ளது. அந்த விடயத்தில் நாட்டினது பாதுகாப்பு விடயத்தில் நாம் மேலும் அக்கறை காட்டவேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றது.
புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த எமது துணிச்சல் மிகுந்த வீரர்களின் உயிர்த்தியாகத்தை எண்ணி தேசத்தின் மக்கள் மிகுந்த வலியோடும், கோபத்தோடும் இருக்கிறார்கள்.
புல்வாமா தாக்குதல் நடந்த 100 மணிநேரத்துக்குள் எமது படையினர் மேற்கொண்ட பதில்தாக்குதல்களில் பெருமளவான தீவிரவாதிகளையும், அவர்களின் புகலிடங்களையும் வேரோடு அழித்துள்ளனர்.
நாட்டினது எப்பகுதியில் தீவிரவாதம் காணப்படுகின்றதோ அங்கிருந்து முற்றாக அதனை அழிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்” என பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.