அத்தோடு முதல் பெண் அமெரிக்க தூதுவராக இளவரசி ரீமா பிண்ட் பண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனங்கள் நேற்று (சனிக்கிழமை) வழங்கப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா உட்பட சர்வதேசத்தின் எதிர்ப்பை சவுதி சந்தித்து வருகின்றது. இந்நிலையிலேயே சர்வதேச நாடுகளின் உறவை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க தூதுவராக செயற்பட்டு வந்த நிலையிலேயே தற்போது இளவரசர் காலித் பின் சல்மானுக்கு பிரதி பாதுகாப்பு அமைச்சு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இளவரசர் காலித் பின் சல்மான் அமெரிக்க தூதுவராக செயற்பட்ட காலத்திலேயே ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை இடம்பெற்றிருந்தது.
இதேவேளை அமெரிக்காவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இளவரசி ரீமா பிண்ட் பண்டர் பின் சுல்தான், அமெரிக்காவுக்கான நீண்ட நாள் முன்னாள் தூதுவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.