நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் வெற்றிடமாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு தகுதியானவர்ளை நியமிக்கும் பணியினை விரைவு படுத்துமாறு மத்திய அரசுக்கு வழிகாட்டக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யபட்டது.
இந்த மனுவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி சஞ்சய் கண்ணா முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ரஞ்சன் கோகோய், அரசு வசம் 27 கோப்புகள் மட்டுமே உள்ளன என்றும் ஆனால் கொலீஜியத்திடம் 70 முதல் 80 கோப்புகள் தேங்கியுள்ள என்றும் கூறினார்.