இதனால் தமது போராட்ட வடிவத்தை மாற்றவுள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.
முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கேப்பாவுலவு மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரும், கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றது. எனவே வலுப்படுத்தும் விதமாக தமது போராட்டத்தை புதிய வடிவில் நடத்தவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த போராட்டம் ஆரம்பமாகி 2 வருடங்கள் பூர்த்தியாகும் நாளில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.