இது குறித்து பாக்கிஸ்தானின் நீரியல் வளத்துறை செயலாளர் கவாஜா சுமாயில் கூறுகையில், கிழக்கு பகுதிகளிலிருந்து வரும் நீரை இந்தியா தங்களது பகுதிகளுக்கு திருப்பிக்கொண்டால் அது குறித்து கவலைப்படவோ , எதிர்போ தெரிவிக்கப்பபோவதில்லை என தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தோ நதிநீர் ஒப்பந்தம், இந்தியா இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை அடுத்து பாக்கிஸ்தானுடனான உறவு குறித்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்ற நிலையில், கிழக்கு பகுதிகளில் பாயும் ஆறுகளின் நீரை ஜம்மு– காஷ்மீர் மற்றும் பஞ்சாபிற்கு மாற்றவுள்ளதாக மத்திய போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.