(ஜெ.ஜெய்ஷிகன்)
உலகப்பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் குருபூசை தின நிகழ்வானது வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் கோறளைப்பற்றுஇ கோறளைப்பற்று மத்தி இந்து அறநெறிப்பாடசாலைகளின் ஒழுங்கமைப்புடன்இ வாழைச்சேனை விபுலானந்தா அறநெறிப்பாடசாலையின் அனுசரணையுடன் அவ் அறநெறிப்பாடசாலையின் அதிபர் திரு.ச.வசந்தகுமார் அவர்கள் தலைமையில் 24.02.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அனுஸ்ரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருவள்ளுவர்பற்றிய சிறப்புரைகள் அறநெறிப்பாடசாலை மாணவர்களால் நடாத்தப்பட்டது. அத்துடன் கலைநிகழ்வுகளும் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் உறுப்பினர்களான ஓய்வுபெற்ற கணக்காளரும்இ தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளருமான உயர்திரு.ரவீந்திரன் ஐயாஇ மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் திரு.பிரசாந்தன்இ சங்க உறுப்பினர்களான திரு.நிறோஜன் ஜீஇ திரு.நிசாந்தன் ஜீ ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.