பொகவந்தலாவ, பிரிட்வெல் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155 தனிவீடுகள் அடங்கிய ‘வீ.கே.வெள்ளையன்புரம்’ புதிய கிராமத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தோட்டப்புறங்களில் தனி வீடுகள் அமைக்கப்பட்டு அவை கிராம மயமாக்கப்பட்டுள்ளதால், அப்பிரதேச மக்கள் தோட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்படாமல் சுதந்திரமாக வாழ்வதற்காக வழி செய்துள்ளோம்.
வீதிகள் உள்ளிட்ட பல குறைபாடுகள் மலையகத்தில் காணப்படுகின்ற போதிலும் சம்பளப் பிரச்சனை தொழிலாளர்கள் மத்தியில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
சமூகத்திற்குத் தேவையான பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு அரச திணைக்களங்களில் அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி போன்றவற்றில் மலைநாட்டு இளைஞர்களை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்த நாட்டில் மலையகப் பிரதேசங்களில் வாழ்கின்ற தொழிலாளர்கள் இலங்கையர் என்ற ரீதியில் பூரண பிரஜைகளாக வாழ வேண்டும்.
எனவே கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மலையக மக்களுக்கு கிடைப்பதற்கு நாம் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.