ஜப்பானின் வடக்குப் பகுதியிலுள்ள ஹோகைடா தீவுப் பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்துகள் சில மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், குறித்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.