வின்ட்ஸரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் இன்று(வெள்ளிக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக கொள்ளை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.