"நமது பிள்ளை நமது பொறுப்பு"எனும் தொனிப் பொருளில் ஸலாமா தின நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
"பிள்ளை வளர்ப்பை கூட்டுப் பொறுப்பாக கருதுவோம் " எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.ஏ.அனஸ் முஹம்மது நளீமி உரையாற்றினார்.
குறித்த நிகழ்வுக்கு கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி, கிண்ணியா தளவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஏ.பீ.மஸூத், பெற்றார்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
(அ . அச்சுதன்)