முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசீர்வாதத்துடன் கொண்டுவரப்படும் தீர்வினையே சிங்கள மக்கள் அங்கீகரிப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைப்பதில் தெற்கு மக்களுக்கு பிரச்சினை இல்லை. யுத்த காலத்தில் வடக்கு மக்கள் தெற்கில் வந்து வாழ்ந்தார்கள். அப்போது மக்கள் ஒற்றுமையாகவே இருந்தனர்.
என்றபோதிலும், மஹிந்த ராஜபக்ஷ வழங்கும் ஒரு அரசியல் தீர்வினை மாத்திரமே தெற்கு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். மஹிந்த ராஜபக்ஷ பிரிவினைவாதத்திற்கு இடங்கொடுக்கமாட்டார் என்ற நாம்பிக்கை தெற்கு மக்களுக்கு இருக்கிறது.
அரசியல் தீர்வு காண கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன சுதந்திரக் கட்சியுடன் இணைந்து எடுத்த முயற்சி தோல்வியடைந்து விட்டது.
எனவே புதிய அரசாங்கத்தில் எமது சர்வகட்சிக் குழுவின் பரிந்துரைக்கு அமைய நாம் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம். மஹிந்த ராஜபக்ஷ அங்கிகரித்த ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், அதனை சிங்கள மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்” என்று அவர் தெரிவித்தார்.