சீனா – அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.
சீன உயர் மட்டக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி சி ஜின் பிங்கை விரைவில் சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.
சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை நிறுத்தி வைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 1க்குப் பின்னர் நீட்டிக்கவும் ட்ரம்ப் முன்வந்துள்ளார்.
ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இதுவே சரியான வாய்ப்பு என்று இருநாடுகளும் கருதுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.