குறித்த கூட்டம் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹீ, தலைமையில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இடம்பெறுகிறது.
நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமான இக்கூட்டத்தில் அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.க, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் தேர்தல் குறித்த பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.