இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்கல் உட்பட 20இற்கும் மேற்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றியுள்ளனர்.
இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான கூட்டுறவு, குடியேற்ற பிரச்சினை, காலநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது. அத்தோடு, பொருளாதார அபிவிருத்தி, பலஸ்தீன பிரச்சினை, லிபிய கிளர்ச்சி, சிரியா மற்றம் யேமன் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
மாநாட்டின் இறுதியில் இவற்றை செயற்படுத்துவதற்கான மூலோபாயங்கள் தொடர்பாக கொள்கைகள் வகுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாநாடு நடைபெறும் சார்ம் எல் ஷெய்க் கட்டடத்திற்கு முன்பாக பெருமளவான எகிப்திய படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.