இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருநீற்றுக்கேணி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பேடன் பவல் சிலை வளாகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் வி.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முன்னதாக காந்திபூங்காவில் இருந்து சாரணியர்களின் ஊர்வலம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பேடன் பவலின் சிலைக்கு மாவட்ட ஆணையாளர் வி.பிரதீபனால் கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது.
சாரணியத்தின் தந்தையெனப்படும் பேடன் பவலின் பிறந்த தினமான இன்றைய தினம் உலக சாரணியர் தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.