குறித்த ஒருங்கினைப்புக் குழு கூட்டமானது மாவட்ட ஒருங்கினைப்புக் குழு இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் ஆகியோர்களின் இணைத் தலைமையில் ஆரம்பமானது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே, க .துரைரெட்ணசிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டார்கள்.
2019 ம் ஆண்டுக்கான அரசியல் பிரமுகர்கள் பங்குபற்றும் முதல் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அபிவிருத்தித் திட்டங்கள், மீள்மதிப்பீடு எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன .
குறித்த கூட்டத்தில் அரச உயரதிகாரிகள், முப்படைகளின் உயரதிகாரிகள் ,திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சிமன்ற தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
(அ . அச்சுதன்)