மானிப்பாய், கட்டப்பாழி ஒழுங்கையில் உள்ள வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடத்தப்பட்டது.
வீட்டுக்குள் நுழைந்த குழுவொன்று வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை பெற்றோல் ஊற்றி எரியூட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.