LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 24, 2019

விமானக் கடத்தல் மிரட்டல்: இந்திய விமான நிலையங்களுக்கு உச்ச பாதுகாப்பு

விமானக் கடத்தல் மிரட்டல் காரணமாக இந்திய விமான நிலையங்களுக்கு உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்தியாவின் 61 விமான நிலையங்களின் பாதுகாப்பு விழிப்புநிலையில் உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தற்கொலைத் தாக்குதல் நடந்து சில நாட்களே கடந்துள்ளன. இந்நிலையில், இந்த அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகமாக்கப்பட்டுள்ளன.

மும்பையில் உள்ள ஏயார் இந்தியா விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று (சனிக்கிழமை) விமானக் கடத்தல் குறித்த அச்சுறுத்தல் அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் விமானம் ஒன்று பாகிஸ்தானுக்குக் கடத்தப்படவிருப்பதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து மும்பையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் விமானங்களில் அதிக சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.

மேலும், வாகனம் நிறுத்தும் இடங்களிலும், விமான நிலையங்களைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7