சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடர், மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னர், அதன் பிரதான பொறுப்பை பிரித்தானியா வகிக்கவுள்ளது.
இந்த நிலையில் ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில்,இலங்கை தொடர்பான கூட்டுத் தீர்மானமொன்றை பிரித்தானியா சமர்ப்பிக்கவுள்ளது.
மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல் மீளமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் இந்தத் தீர்மானத்தில் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது.
இலங்கை தொடர்பாக பிரித்தானியா கொண்டுவரும் இந்த தீர்மானத்திற்கு கனடா, ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.