காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன்போது உயர்நிலை பொலிஸ் அதிகாரியொருவரும் உயிரிழந்ததாக காஷ்மீர் மாநில பொலிஸ் ஆணையாளர் தில்பாக் சிங் தெரிவித்தார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட டுரிகாம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்று அப்பகுதியை பயங்கரவாத ஒழிப்பு சிறப்புப் படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் தற்போதைய நிலைவரப்படி புல்வாமா தாக்குதலுக்குக் காரணமாக இருந்த ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.